அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம்: தமிழக அரசு கிடுக்கிப்பிடி!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதன் எதிரொலியாக தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம்,திருவாரூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் அம்மாவட்ட ஆட்சியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் இதனை மீறும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரம், வருவாய், காவல் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெலும், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.