சுற்றுலா பயணிகளே உஷார்!! போதை காளான் என்ற பெயரில் போலி காளானை விற்று மோசடி…

திண்டுக்கல் மாவட்டம் இயற்கை சார்ந்த வனப்பகுதி ஆகும். அங்கு பல்வேறு தாவர செடிகள், அரிய வகை மூலிகைகள் மற்றும் காளான்கள் வளர்ந்து வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளான்கள் கிடைக்க கூடிய நிலையில் காடுகளில் இயற்கையாகவே வளரக்கூடிய காளன்களில் போதையூட்டும் ஒருவகை வேதிப்பொருட்கள் கலந்துள்ளது.

இந்த வகை காளான்கள் போதை காளான்கள் என அழைக்கப்படுகிறது. இந்த காளான்கள் சில வருடங்களுக்கு முன் போதைக்காக மிகப் பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. போதைக்காக இந்த காலங்கள் பயன்படுத்தப்பட்டதை தெரியவந்ததை அடுத்து அது தடைசெய்யப்பட்டது.

இந்நிலையில் போதை காளான்கள் விற்பனை செய்யப்படும் நபர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து போதை காளான்களின் விற்பனை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கொடைக்கானலில் போதை காளான்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்களை குறிவைத்து நூதனமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலம் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டு அந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டால் போதை காளான்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் போதை காளான் என்ற பெயரில் போலி காளான்களை ஒரு சிலர் விற்று காசு பார்த்து வருவதாக தெரிகிறது. அவ்வப்போது போதை காளான்களின் சிலர் பிடிபட்டாலும் அவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை அளிக்கப் படுவதாகவும், போதை காளான் விற்பனை செய்பவர்களுக்கு தனிச்சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *