ஆனி அமாவாசை! புனித நீராட ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்…

ஆனி மாத அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

இன்றைய தினத்தில் ஆனி மாத அமாவாசை என்பதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளன. குறிப்பாக ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனிடையே வருகை தந்துள்ள பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்துள்ளனர். பின்னர் கோயிலுக்கு உள்ளே இருக்கும் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பின்னர் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் பெற்று பக்தர்கள் செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது மாத இறுதிநாள் என்பதால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதனால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் அக்னி தீர்த்த கடற்கரையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், அமாவாசை என்பதால் தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளிலும் திதி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *