மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி: இளம்பெண் தற்கொலை முயற்சி!

புதுக்கோட்டை மாவட்டம் சத்திய மூர்த்தி பகுதியை சேர்ந்த அனிதா கணேசன் தம்பதியினர் கடையை விரிவுபடுத்துவதற்காக இந்திரா என்பவரிடம் 1 லட்சம் கடன்வாங்கிய கூறப்படுகிறது. முதலில் மாதந்தோறும் 8 ஆயிரம் வட்டி செலுத்த வேண்டும் என தெரிவித்த நபர்கள் ஓரிரு நாட்களில் தினசரி வட்டியாக 3 ஆயிரத்து 500 ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் மிரட்டல் விடுத்ததால் அந்த தம்பதியினர் சில நாட்களுக்கு முன்பு தினசரி வட்டி கொடுத்துள்ளனர். பின்னர் அதிகமாக வட்டி கேட்டு தகாத வார்த்தைகளினால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனிதா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் அவருடைய கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனிடையே இந்திரா உள்ளிட்ட 6 பேரின் மீது கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் தினசரி வட்டி, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி வசூலித்து வந்ததாக கூறப்படும் இந்திரா என்பவர் ஏற்கனவே மற்றொரு கந்துவட்டி தொடர்பாக கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *