கடும் பொருளாதார நெருக்கடி: 2 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை!

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு இரண்டு பேர் வருகை தந்துள்ளனர். இராமேஸ்வரம் அடுத்த கோதண்டம் கடற்கரையில் அகதிகளாக 2 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பொருளாதர நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் நேற்று திருகோண மலைப்பகுதியை சேர்ந்த 2 முதியோர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். குறிப்பாக தனுஷ் கோடி வந்த அவர்களை பாதிகடலில் இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிகடலில் இருந்து கரைக்கு வந்த அவர்களை தனுஷ்கோடி அடுத்துள்ள கோதாண்டம் ராமன் கடற்கரை பகுதியில் மயக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை கடலோர காவல்படையினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவருவதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும், இந்திய கடற்படை போலீசார் இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *