சிதம்பரம் நடராஜர் கோயில்: ஆனி திருமஞ்சன திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றது!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில். இந்த கோயிலில் ஆண்டுக்கு 2 முறை மிகப்பெரிய திருவிழா நடக்கும். அதாவது ஆனி மாதத்தில் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைப்பெறும்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் பக்தர்கள் எளிமையாக நடைப்பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது கோலாகலமாக நடைப்பெற்றது.

இதனிடையே திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் இன்று தொடங்கியுள்ளது. நடராஜர் கோயிலுக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கோயிலின் கனக சபை தீட்சதர் கொடியேற்றத்துடன் தொடங்கி வைத்தார். அதோடு கொடி மரத்திற்கு பூஜைகள் நடத்தி தொடங்கி வைத்தார்.

இந்த திருவிழாவை தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று 5 தேர்களில் சுவாமிகள் வலம் வருவார்கள். அன்று இரவு மகா அபிஷேகம் நடைபெறும். மறுநாள் 6-ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனம் நடைப்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *