கோர விபத்து: ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் பலி!
நெல்லை – தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது ஊத்துப்பாறை கிராமம். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆட்டோவில் அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று ராஜா என்பவரின் மகன் செல்வ நவீன் மற்றும் அவருடன் 6 மாணவர்கள் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று காலையில் வசவுபுரம் என்ற இடத்தில் நிலைத்தடுமாறி ஆட்டோ கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் எல்.கே.ஜி. மாணவர் செல்வ நவீன் என்பவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்ற மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஆட்டோ ஓட்டுனர் அந்த இடத்தில் இருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆட்டோவின் உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.