வார விடுமுறை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!

வார விடுமுறையின் போது பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிப்படுவது வழக்கம். அந்த வகையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

இந்நிலையில் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை தினத்தையொட்டி வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடுவதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். அதோடு புனித நீராடியும் வருகின்றனர்.

இதையடுத்து கோயிலுக்கு உள்ளே இருக்கும் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பின்னர் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் பெற்று பக்தர்கள் செல்கின்றனர். மேலும், அம்மாவாசை, கிருத்திகை வருவதற்கு குறைந்த நாட்களே இருப்பதால் பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *