சுற்றுலா பயணிகளே உஷார்!! வனத்துறையினர் எச்சரிக்கை…

Warning

சுற்றுலா தலங்களில் மிக முக்கியமாக அமையும் நீலகிரியில் வனவிலங்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. அந்த வலையில் உதகையில் சுற்றித்திறிவது புலியா அல்லது சிறுத்தை புலியை என கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உதகையில் சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளின் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது. ரோஸ்மூண்டு பகுதியில் இரு கறவை மாடுகளை பட்டப்பகலில் சிறுத்தை புலிகள் வேட்டையாட முயன்றதும் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சம் நிலவியது.

இதனையடுத்து சிறுத்தை புலி வேட்டையாட முயன்ற இடத்தில் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் மாடுகளை தாக்க முயன்றது புலி அல்லது சிறுத்தைப்புலி என்பதை கண்காணிக்க 5 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், உதகையில் புலி மற்றும் சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மார்லிமந்து பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள், அப்பகுதி மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *