பட்டாசு ஆலை விபத்து: மேலும் ஒருவர் பலி!
கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையில் நேற்று வழக்கம்போல் 5 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென ஒரு நாட்டு வெடி பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளும் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த தொழிலாளர்களான நெல்லி குப்பத்தை சேர்ந்த அம்பிகா, பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்த 35 வயதான சித்ரா என்ற இரண்டு பெண்களும் அதே இடத்தில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே போல் சி.என் பாளையத்தை சேர்ந்த இளைஞரும் மரணம் அடைந்தார். இந்த விபத்தில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி வசந்தியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், வெடி விபத்தில் பட்டாசு ஆலை தரைமட்டமான நிலையில் ஆலையின் உரிமையாளரான மோகன்ராஜை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.