அரசு பள்ளிகளில் அதிரடி மாற்றம்: வெளியானது புது உத்தரவு!!

DPI

மேல்நிலை கல்வி மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் எனவும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 20-ஆம் தேதி வெளியாகியது. தற்போது மாணவர் சேர்க்கையையும் நடைபெற்று வருவதால் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பதினோராம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை என்பது தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் மாணவர் சேர்க்கையின் போது கட்டாயம் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார். குறிப்பாக ஒவ்வொரு பாடப் பிரிவிலும் இட ஒதுக்கீடு முறையில் சேர்கை நடைமுறையினை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வழக்கமாக உயர்கல்வி சேர்க்கையின் போது மட்டுமே இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை சுட்டிக்காட்டி தற்போது பள்ளி கல்வி துறை ஆணையர் சுற்றறிகை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *