மீனவர்களே உஷார்!! அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்லவேண்டாம்..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழைபெய்து வந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்ற அறிவிப்பு வெளியாகியது. இந்த சூழலில் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
23.06.2022. 24.06.2022: குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
25.06.2022, 26.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என கூறியுள்ளது.