பலாப்பழ மர்ம மரணம்! தாய், மகன் உயிரிழப்பில் திடீர் திருப்பம்..

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே குளிர்பானம் குடித்து தாயின் மகன் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக விஷம் அருந்தியது தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த பரணி, அவரது மகள் இனியா, மகன் பரணிதரன் ஆகியோர் குளிர்பானம் குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரணியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே குடும்ப பிரச்சனை காரணமாக குளிர்பானத்தில் மகன் மகளுக்கு விஷம் கலந்து கொடுத்து விட்டு பரணியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *