எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரியில் 500 கன அடி கன நீர் திறப்பு !!

காவிரி நீர் பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணா நதி நீர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரானது நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 775 கன அடி நீர் வந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

குறிப்பாக மொத்த நீர்மட்டமான 24 அடியில் இருந்து தற்போது 23.60 அடியை தாண்டியுள்ளது. இதனால் நேற்று 250 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 250 கன அடிநீர் திறக்கப்பட்டு மொத்தமாக 500 அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு,திருநீர்மலை, அடையாறு ஆகிய பகுதிகளுக்கு தாழ்வாக உபரி நீர் செல்லும் என்பதால் கரையோர மக்கள் இப்பகுதிகளில் இருக்கவேண்டுமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து வருவாய்த் துறை மற்றும் கோட்டாட்சியர் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்ட நிலையில் தற்போது 500 கன அடி நீர் திறக்கப்படுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும். செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தவரையில் வடமேற்கு பருவமழை வந்தால் தான் ஏரி நிரம்பும். ஆனால் பல ஆண்டுகள் கழித்து ஜூன் மாதத்தில் ஏரி நிரம்பியுள்ளது. தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *