கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று உபரி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரி பல ஆண்டுகள் கழித்து ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன்காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று 12 மணி அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அந்தவகையில் முதற்கட்டமாக 250 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் ஆனது சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு,திருநீர்மலை, அடையாறு ஆகிய பகுதிகளுக்கு தாழ்வாக உபரி நீர் செல்லும்.

இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி அமைகிறது.

இதன் மொத்த கொள்ளளவு 3,645 கன அளவு ஆகும். இன்று காலை நிலவரப்படி 3,509 கன அடிநீர் உள்ளதாக தெரிகிறது. இது ஏரியின் மொத்த கொள்ளளவில் 96% ஆகும். இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் திறந்துவிடப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தவரையில் வடமேற்கு பருவமழை வந்தால் தான் ஏரி நிரம்பும். ஆனால் பல ஆண்டுகள் கழித்து ஜூன் மாதத்தில் ஏரி நிரம்பியுள்ளது. தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *