தஞ்சையில் பரபரப்பு: டயரில் சிக்கிய பெண்ணை 500 மீட்டர் தூரம் இழுத்து சென்ற தனியார் பேருந்து!!

தஞ்சையில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளிய தனியார் பேருந்து 500 மீட்டர் தூரம் இழுத்து சென்ற போது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை அருகே கழிமேடு பகுதியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி தஞ்சையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜபாளையம் பகுதியில் தஞ்சையிலிருந்து பாபநாசம் நோக்கி சென்ற தனியார் ஒன்று அகிலாண்டேஸ்வரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

சுமார் 500 மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தை இழுத்துச் சென்ற பேருந்து முன்னால் சென்ற கார் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் சிக்கிய அகிலாண்டேஸ்வரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆத்திரமடைந்து அருகிலிருந்தவர்கள் சம்பவம் நடத்திய ஓட்டுநர் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே உயிரிழந்த அகிலாண்டேஸ்வரியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் காயமடைந்த ஓட்டுநரை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *