பிளஸ் 2 தேர்வில் தோல்வி: ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை!
10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்தலில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட தகவல்கள் நேற்று படிப்படியாக வெளியாகியது. இதுதொடர்பாக மாவட்டம் வாரியாக எத்தனை தற்கொலைகள் நடந்து இருக்கிறது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக பொதுத் தேர்வில் தோல்வி அடைந்துள்ள மாணவர்கள் 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. அதோடு 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே 11 மாணவர்களில் 10 மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் என்றும் ஒரு மாணவர் அரசு நிதி உதவி பெறும் மாணவர் என என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடமாவட்டங்களில் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இதில் சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றதாக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.
இந்த தகவல் கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் 28 மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்து கல்வித்துறை அவ்வப்போது தகவல்களை சேகரித்து வருகிறது.