மாணவி ஹேமமாலினி மர்ம மரணம் வழக்கில் வெளிவந்த புதிய அதிர்ச்சி தகவல்!

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பமாக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துப்பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் முனுசாமி. செம்மேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை நாகதோஷம் இருப்பதாக அடிக்கடி நள்ளிரவு பூஜைக்கு வரவழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நள்ளிரவில் பூஜைக்கு சென்றுள்ள மாணவியின் மறுநாள் காலையில் முனுசாமி வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இந்நிலையில் 2 மாதங்களாக சாமியார் முனுசாமியிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை சாமியார் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சாமியாரின் கொடுமையால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சாமியார் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்கப்பட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், பல பெண்கள் சாமியாரால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சாமியாருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *