கனமழை எதிரொலியாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது செம்பரம்பாக்கம் ஏரி!!

Dam

காவேரி, கிருஷ்ணா நதிநீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரி பல ஆண்டுகள் கழித்து ஜூன் மாதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை பெய்யும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் நிறையும். ஆனால் இந்தாண்டு கோடை பருவத்தில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதற்கு கடந்த ஆண்டில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் காரணம் என கருதப்படுகிறது.

அதேபோல் நேற்று இரவு பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1700 கன அடி நீர் வந்துள்ளது. இதனால் நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்து செம்பரம்பாக்கம் பாதுகாப்பு அளவை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டு இருப்பதால் ஏரியின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அதேசமயத்தில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதாக தெரிகிறது. இதனால் நடப்பாண்டில் சென்னைவாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *