முதல்வர் கோரிக்கை ஏற்பு! சிறுவாணி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு..
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சிறுவாணி அணையின் இருந்து கோவை மாநகராட்சிக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் எவ்வித நடவடிக்கை எடுக்காததாக தெரிகிறது.
இதனால் இதனை மீண்டும் வலியுறுத்தி இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்த சூழலில் சிறுவாணி அணையின் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சிறுவாணி அணையின் இருந்து 12 மணி முதல் வழக்கமான அளவைவிட கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.