கனமழை எதிரொலி: 31 விமான சேவை பாதிப்பு!!
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் சூறாவளி மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேரவேண்டிய 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக 4 விமான சேவைகள் ஜெர்மனி, தேகா, துபாய், மும்பை ஆகிய விமானங்கள் வானில் வட்டமடித்த நிலையில் ஐதராபாத் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
அதே போல் மலேசியா, தாய்லாந்து, வார்நாசி, மங்களூரு, திருச்சி உள்ளிட்ட விமானங்கள் மழை ஓரளவு நின்றப்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கியது. இதேபோல் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் உள்ளிட்ட 15 மழைப்பாதிப்பால் புறப்படும் நேரம் பாதிப்படைந்தது.
இந்நிலையில் 2 மணிக்கு மேல் மழை பாதிப்பு மேலும் அதிகரித்ததால் ஒன்றன் பின் ஒன்றாக வினாம் தரை இறக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.