விசாரணை கைதி மரணம்: உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!!

கடந்த வாரம் கொடூங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட ராஜசேகர் திடீரென மரணம் அடைந்தார். இவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவரது மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் பிரேத பரிசோதனை முடிந்து நான்கு நாட்கள் ஆகியும் உடலை பெற்றுக் கொள்ளாத சூழல் உருவாக்கியதாக தெரிகிறது. குறிப்பாக முதல் பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக வழங்கப்படவில்லை என்றும் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நேற்று அனைத்து பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு வீடியோ தரவுகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் இறப்பு குறித்து அறிக்கையில் கையெழுத்து போடும்போது சாதிப்பெயர் மாறி இருந்ததால் உடலைப்பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த சூழலில் சாதி பெயரை மாற்றி தருவதாக மாஜிஸ்திரேட் அளித்த உறுதியை ஏற்று உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் அவர்களின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திற்கு அவரது உறவினர்கள் உடலை எடுத்துச்சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *