பப்ஜி விளையாட்டால் நேர்ந்த சோகம்! நண்பனை கத்தியால் குத்திய இளைஞர்…
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பப்ஜி விளையாட்டால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும் பப்ஜி விளையாட்டு என்பது ஒரு புறம் தலைதூக்கி கொண்டுதான் வருகிறது.
அந்த வகையில் திருவள்ளுவர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே கூடப்பக்கத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனது நண்பரகளுடன் சேர்ந்து பப்ஜி விளையாடியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரச்சனை ஆனதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் தனது சகோதரர்களை வரவைத்து சசிகுமாரை அவரது நண்பர் அஜித்குமார் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்நிலையில் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு மருத்துவ மனைகளில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். அதோடு அவர்கள் மீது வழக்குப்பதிவு போடப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பப்ஜி விளையாட்டால் தனது நண்பனை கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .