வரி ஏய்ப்பு புகார்! எம்ஜிஎம் குழுமத்தில் 2-வது நாளாக ரெய்டு…
தமிழகம் முழுவதும் எம்.ஜி.எம். நிறுவனத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனையில் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை, திண்டிவனம், காஞ்சிபுரம், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.எம் தலைமை அலுவலகத்தில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் மற்றொரு அலுவலகத்திலும் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எம்ஜிஎம் என்பது மதுபானம் தயாரிக்க கூடிய முக்கிய நிறுவனமாக அமைவதால் இந்நிறுவனங்களின் கிளைகள் பல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கேளிக்கை பூங்கா, மதுபான உற்பத்தி, தொழில்துறை போன்ற 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையானது நடைப்பெற்று வருகிறது. விழுப்புரத்தில் சோதனை நடத்தியப்போது ஊழியர் ஒருவர் முக்கிய ஆவணங்களை வயல்வெளிகளில் வீசி சென்றதாக தெரிகிறது. வருமான வரித்துறையினர் அவற்றை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.