அட்ராசக்க..! ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனால் போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அரசு அறிவித்ததால் ஒரு சில சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு 22.2.2021 முதல் ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 1.1.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14 சதவீதம் அகவிலை ஊதிய உயர்வு வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்த நிலையில் அரசு ரேஷன் கடைகளில் வேலை செய்யும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28%-ஆக உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2852 கட்டுநர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.73 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.