குறித்த நேரத்தில் பள்ளியை திறக்காத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொய்யப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இந்த பள்ளியில் 109 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் காலை 9 மணி ஆகியும் ஆசிரியர்கள் யாரும் வராததால் பள்ளி திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக பாதி மாணவர்கள் இன்று பள்ளி விடுமுறை என நினைத்து வீட்டிற்கு திரும்பிச்சென்றனர். பாது மாணவர்கள் பள்ளிக்கு வெளியே காத்திருந்த சூழலில் தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து பள்ளியை தாமதமாக திறந்துள்ளனர்.

இது குறித்த தகவலானது சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இதனால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அறிவுரைப்படி விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிரியர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும், பள்ளிகள் நேரத்திற்குள் திறக்கப்படாமல் இருந்ததற்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்காத காரணத்தினால் தலைமை ஆசிரியர் அருள்மலரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *