கர்ப்பிணியை கட்டிப்போட்டு சித்ரவதை செய்த சைக்கோ கணவர்!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த கோ.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான மணிராஜ். லாரி ஓட்டுநராக உள்ளார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த சர்மிளா பானு என்பவரும் காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சர்மிளா பானு மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

8 மாத கர்ப்பிணியான அவரை கணவர் நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சர்மிளா பானு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் இதனால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்லும் ஷர்மிளாவை பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக அமைந்துள்ளது.

அதேபோன்றுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டதாக சர்மிளாவின் பெற்றோர் கூறினர். ஆனால் ஷர்மிளாவின் பிறப்புறுப்பு சிதைந்து போய் இருப்பதை கண்டு பெற்றோர் பதறிபோயினர். குறிப்பாக ஷர்மிளா பானுவின் கை கால்களை கட்டி வாயில் துணியை வைத்து நிர்வாணப்படுத்திய மணிராஜ் வீட்டில் சாப்பிட தயார் செய்து வைத்திருந்த ரசத்துடன் மிளகாய் தூளை கலந்து சர்மிளா பானு மீது கூறியுள்ளார்.

அதோடு குழம்பு கரண்டியில் ஷர்மிளாவை தாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் சுயநினைவின்றி இருந்த ஷர்மிளாவை மீட்ட அவரது பெற்றோர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க தயங்கியதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சர்மிளா பானுவுக்கு 25 தையல் போட்டுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி மனைவியை மணிராஜ் சித்திரவதை செய்து ரசித்தது குறித்து விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் மணிராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *