தேர் விபத்து: தமிழக அரசு நிதியுதவி!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதுஅல்லி கிராமத்தில் காளியம்மன் தேர்திருவிழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக கடந்த 11ஆம் தேதி கோவில் திருவிழா தொடங்கிய நிலையில் ஐந்து நாட்களாக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாலை தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அப்போது 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் எதிர்பாராத விதத்தில் தேரானது கோயிலை வந்தடைவதற்கு முன்பாக திடீரென ஆச்சு முறிந்து கீழே சரிந்து விழுந்தது. திடீரென விழுந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது. அதே போல் கீழே சரிந்து விழுந்த தேரில் சிக்கி சரவணன் மற்றும் மனோகரன் ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த தேர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் உயிரிழந்து இருப்பதால் உறவினர்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *