எப்ஐஆர் பதிவாகியிருந்தாலும் பாஸ்போர்ட் வழங்க தடையில்லை… ஐகோர்ட் அதிரடி ஆணை!
முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் தமது பாஸ்போர்ட் தொலைந்துவிட்ட நிலையில் இந்தியா திரும்புவதற்காக தமக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி மலேசியாவில் இந்திய தூதரகத்தில் விண்ணப்பம்
செய்ததாகவும், குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் கட்டி அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் உத்தரவு தேவை என கருத்து தெரிவித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்,
இந்தியாவை விட்டு செல்ல வேண்டிய நிலையிருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் கோரினால் நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை அப்துல் ஷேக்குக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்குமாறு இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட்டார்.