உள்ளாட்சித் தேர்தல் எப்போது? இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால், 9 மாவட்டங்களுக்கானத் தேர்தலை நடத்த தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, இந்தத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கொரோனா காலம் என்பதால், கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றியே தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் பிறகு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *