பூனை எலியைப் பிடிப்பது போல் உள்ளது… முன்னாள் அமைச்சர் விமர்சனம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாட்டின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அடுத்து, ஆகஸ்ட் 14ம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் வரலாற்றியேயே முதன் முறையாகத் தாக்கல் செய்யப்பட்டது.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்றையக் கூட்டத்தில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாத கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், ஒரு அறிக்கையை தயார் செய்யும் போது, தாய் பூனை குட்டி பூனையை வாயில் கவ்வுவது போல் தாய் பாசத்தோடு இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது என விமர்சித்துள்ளார்.
மேலும், எனக்கு பொருளாதாரம் தெரியாது, ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும் என்றும் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அடிப்படையே அதிமுக அரசு கொண்டு வந்த மடிக்கணினி திட்டம் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.