தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழக்தின் நீலகிரி, கோவை, சேலம் வேலூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 2 ஆம் தேதி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களின் ஓரிரூ இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…