சில்லென்ற சென்னை…விடிய விடிய மழை

தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் தேனி , திண்டுக்கல் , சேலம் , ஈரோடு , தருமபுரி , கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் மழை பெய்யும் எனவும், சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

அதன்படி, இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. மேலும், சென்னையின் பல இடங்களில் விடிய விடிய பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ந்துள்ளனர்.

கிண்டி, போரூர், வடபழனி, நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதே போல் மயிலாப்பூர், அடையாறு, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், அனகாபுத்தூரில் பரவலாகவும் மழை பொழிந்தது. 

சென்னையின் புறநகர் பகுதியான ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய மழை பொழிந்தது. இந்நிலையில், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அரபிக்கடல் பகுதிகளுக்கு 5 நாட்களும், கேரள கடல் பகுதிகளுக்கு 3 நாட்களும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *