ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர்

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
தற்போது தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்திருந்தாலும் தளர்வுகளுடன் ஊரடங்கு இன்னும் அமலில் இருக்குறது. இந்த ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதனையடுத்து, ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள மாவட்டங்களிலும் போக்குவரத்தை அனுமதிக்கலாமா? கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்ற முறை 3 வகைகளாகப் பிரித்து தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அளிக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.