சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… சென்னைவாசிகளே உஷார்
தமிழகத்தில், கடந்து ஒரு மாதமாக அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறையத்தொடங்கியுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பதில் முதலிடத்தில் இருந்த சென்னையிலும் சில நாட்களாகத் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 3,351 ஆக அதிகரிப்பு பாதிப்பு சதவீதம் 0.2%ல் இருந்து 0.6% ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.