ஊரடங்கில் தளர்வுகளா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுப்பதற்காக தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணிக்கு முடிவடையும் நிலையில், அடுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று(4.6.2021) காலை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
முழு ஊரடங்கு காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கில் தளர்வுகளற்ற கட்டுப்பாடுகள் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி ஆகிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.