தாசில்தாருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயன்ற கிராம உதவியாளர்!

கடலூர் மஞ்சக் குப்பத்தைச் சேர்ந்த மாரியம்மாள், பாதிரிக்குப்பம் விஏஓ அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிதேவிக்கும் பணியின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இதில் விரக்தியடைந்த, மாரியம்மாள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாரியம்மாள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து தாசில்தாருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், விஏஓ லட்சுமிதேவி, தன்னை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வழக்கமாக அமரும் இடத்தில் அமர அனுமதிக்காமல், மறைவாக அமரக்கூறி நாற்காலியை தூக்கி எறிந்ததால் மனமுடைந்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…