நேற்று தனது இரண்டாவது கணவர் மீது கொடுத்த புகாரை இன்று வாபஸ் பெற்ற பிரபல நடிகை!
சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தனது இரண்டாவது கணவர் மீது நடிகை ராதா நேற்று புகார் கொடுத்த நிலையில் திடீரென அதை இன்று வாபஸ் வாங்கியுள்ள சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2002 ம் ஆண்டு நடிகர் முரளி, வடிவேலு நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. அதனைத் தொடர்ந்து சில தமிழ் திரைப்படங்களில் நடத்தவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
பின்னர் கடந்த 2013ம் ஆண்டு தனது முதல் கணவரை விட்டு பிரிந்து சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் நடிகை ராதா. இதனையடுத்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக மேலாக எஸ்.ஐ வசந்தராஜாவுடன் ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு ராதாவுக்கு தாலிக்கட்டிய வசந்தராஜா அவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். தற்போது வசந்தராஜா எண்ணூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் எஸ்.ஐ வசந்தராஜாவின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் ஒன்றினைக் கொடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் எஸ்.ஐ வசந்தராஜவிடம் விசாரணை நடத்தப்பட்ட வந்தது.
இந்தச் சூழலில் எஸ்.ஐ வசந்தராஜா, தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ராதா காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.