நீட் விவகாரத்தில் ஏமாற்றுவதை நிறுத்துங்கள்…. சூடான எதிர்க்கட்சித் தலைவர்!

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு தொடர்ந்து மாணவர்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். நீட் தேர்வை ரத்துசெய்ய வழி தெரியும் எனக்கூறிய ஸ்டாலின் தன் இயலாமையை மறைக்க என்மீது பழிபோடுகிறார். ஓராண்டுக்கு நீட் தேர்வில் விலக்கு கேட்டும், நீட் தேர்வில் நிரந்த விலக்கு கேட்டும் அதிமுக போராடியது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடியானதற்கு நீட் தேர்வே ரத்தானது போல் அறிக்கைவிடுகிறார் முதல்வர். எதிர்க்கட்சியான பிறகும் எங்களை பாஜகவின் பாதம் தாங்கி என நாகரிகம் இன்றி நஞ்சை கக்கி இருக்கிறார்.
நீட் முதல் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒவ்வொரு அடியையும் மிகவும் எச்சரிக்கையாக வைத்து செயல்பட்டோம். நீட் விவகாரத்தில் திமுக ஆட்சியாளர்கள் வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.