தடுப்பூசி செலுத்துவதில் ஆமை வேகத்தில் செயல்படும் தமிழக அரசு…ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்குவதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டைவிட பின் தங்கிய மாநிலங்களான பீஹார், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில்கூட 24 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வெறும் 19 விழுக்காடு மக்கள்தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகம்தான் தடுப்பூசி போடுவதில் கடைசியில் உள்ளது.
மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாட்டில் சுணக்கம் இருப்பதாக தெரிகிறது. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் மேதகு பிரதமர் அவர்களை நேரில்சந்தித்து விளக்கி இந்தாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
பல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவது தமிழ்நாட்டில்தான் சுணக்கம் இருக்கிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி அனைத்து மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார்.