இங்கிலாந்தில் இருக்கும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொரோன பாதிப்பு!

இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மேலும் அதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீண்டும் பங்கேற்க இருப்பதால் இங்கிலாந்திலேயே தங்கியிருக்கிறார்கள்.
மேலும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.மேலும் அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. இருவரும் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.