ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னர்… அவர் போக்கில் அவரை விடுங்கள் – ரோகித் ஷர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நட்சத்திர வீரராக உருவாகியுள்ளார் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பர்ஸ்ட் கிளாசாக விளையாடி அசத்தியிருந்தார்.

இந்நிலையில், ரிஷப் பன்ட் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா கூறுகையில், ”ரிஷப் பன்ட் அபாரமாக விளையாடி வருகிறார். அவரை அவர் போக்கில் விட்டு விட வேண்டும். நிச்சயம் நல்ல மேட்ச் வின்னராக அவர் ஜொலிப்பார். அதைவிடுத்து அவர் மீது தேவையில்லாத பிரஷரை போடுவது தவறு. இந்த விளையாட்டை அவர் ஜாலியாக அனுபவித்து விளையாட நாம் அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அதை தான் அணி நிர்வாகம் செய்து வருகிறது. ஒவ்வொரு தொடராக அவர் பல பாடங்களை கற்று கைதேர்ந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வருகிறார்” என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வானவேடிக்கை காட்டும் கிரிக்கெட் வீரர் பன்ட். டி20 என்றால் சொல்லவா வேண்டும். பன்ட் ஆட்டத்தில் அதிரடிக்கும், சர்வெடிக்கும் பஞ்சமே இருக்காது என பன்ச் பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிவி.சண்முகத்தை கண்டு கொள்ளாத எடப்பாடி? சமாதான முயற்சியில் முன்னாள் அமைச்சர்கள்…!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்…

ஊராட்சி மன்ற தலைவரை, பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி…

ரெட் ஜெயிண்ட் எல்லா படங்களையும் அடி மாட்டு விலைக்கு வாங்கி அராஜகம் செய்கிறது…!-முன்னாள் முதல்வர் 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார…