உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

அடுத்த இரண்டு போட்டிகளும், உலகின் மிகப்பெரிய மைதானமான குஐராத் மாநிலம் மோதிலால் நகரில் உள்ள, சர்தார் படேல் மைதானத்தில் நடைபெற உள்ளன.

டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, நடைபெறும் ஐந்து டி20 போட்டிகளும் இதே மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளுக்காக, சர்தார் படேல் மைதானம், நிழல் விழாத எல்இடி ஃப்ளட் விளக்குகள், 4 டிரெஸ்ஸிங் ரூம்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.