திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்: அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கடற்கரையோரம் நடந்து சென்றால் கிளிஞ்சல்கள் கிடைக்கும். ஆனால் தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை தற்போது கோடீஸ்வரியாக மாற்றியுள்ளது கடற்கரை.

சிரிபான் (49) என்ற பெண் கடற்கரையில் காலார நடந்து சென்றுள்ளார். அப்போது வித்தியாசமான பொருள் ஒன்று கடற்கரையோரம் ஒதுங்கி கிடப்பதை பார்த்துள்ளார். அருகே சென்று பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. அது தங்கமோ வெள்ளியோ இல்லை. அதைவிடவும் விலை உயர்ந்த திமிங்கலத்தின் வாந்தி. ஆமாம். திமிங்கலத்தின் வாந்தி அரிய பொருளாக பார்க்கப்படுகிறது.
திமிங்கலத்தின் வாந்தி, அதன் விந்தணுச் சுரப்பில் இருந்து வெளிப்படும் மெழுகு போன்ற பொருளை உள்ளடக்கி உருவாகும். இது, வாசனை திரவியங்களின் முக்கிய பொருளாகும். திமிங்கலத்தின் வாந்தி கலந்து உருவாக்கப்படும் வாசனை திரவியங்கள் விலை உயர்ந்தவை. அப்படிப்பட்ட அரியவகை பொருளான திமிங்கலத்தின் வாந்தியை பெறுவதற்கு முன்னணி வாசனை திரவிய நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அரிய பொருள்தான் கடற்கரையில் சிரிபானுக்கு கிடைத்துள்ளது.
இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் வாந்தியைத் தான் சிரிபான் கண்டெடுத்துள்ளார். தற்போது விற்பனையை எதிர்பார்த்து காத்திருக்கும் சிரிபான், இது தனக்கு அதிர்ஷம் தான். இதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். தன் குடும்பத்தின் வாழ்வாதாரமே மாறவுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…