திமுக, அதிமுக இடையே மோதல்; 2 எம்.எல்.ஏக்கள், எட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் கைது..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர்மன்ற சாதாரண கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது கூட்டம் துவங்கி சிறிது நேரத்தில் நகர் பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ளதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் பிரச்சனையை கிளப்ப திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் உருவானது இதனால் நகர மன்றத்தின் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக கூறி நகர மன்ற தலைவர் தனது அரைக்கு சென்று விட்டார் .
இதற்கிடையே அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்கள் நோக்கி தகாத வார்த்தையில் பேசியதாக திமுக கவுன்சிலர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இதே போல அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்களை தங்களை தாக்கியதாக கூறி புகார் அளித்தனர் இருதரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில்
அதிமுக கவுன்சிலர்கள் நாற்காலியை எறிந்து தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூன்றாவது நாளாக நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இவர்களுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ. கே. செல்வராஜ் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி .ஆர். ஜி. அருண்குமார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாலை நகராட்சி அலுவலகத்தை முற்று இட வந்தனர் இதற்கு அனுமதி அளிக்காத மேட்டுப்பாளையம் போலீசார் 2 எம்எல்ஏக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்
மேலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 8 அதிமுக கவுன்சிலர்கள் வெளியேற்றப்பட்டு கைது செய்தனர் கவுன்சிலர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய அதிமுகவைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் போராட்டம் நடத்தி வந்த கவுன்சிலர்கள் கைது நடவடிக்கையால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.