பாஜக மாவட்ட தலைவர் மீது பெண் பாலியல் புகார்; போலீசார் தீவிர தேடுதல்

புளியங்குடி காவல் நிலையத்தில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் மீது பெண் பாலியல் புகார். தலைமறைவான பாஜக பிரமுகரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தலைவன் கோட்டை அதிகாரி வீட்டு தெருவை  சேர்ந்தவர் ராமராஜ். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவராகவும் தற்போது மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.தலைவன் கோட்டை அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் பத்மாவதி (பெயர் வேண்டாம் ) பெண் ஒருவருக்கு போன் மூலமாக தகாத முறையில் பேசியதாக கடந்த 31ம் தேதி உறவினர்களும் , ராமராஜாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பின்பு புளியங்குடியில் உள்ள காவல் நிலையத்தில் ராம்ராஜா மீது தனக்கு போன் மூலமாக பேசி பாலியல் ரீதியான தொந்தரவு செய்த புகார் அளித்தார். இதனையடுத்து ராமராஜாவை கைது செய்ய தலைவன்கோட்டைக்கு சென்று போலீசார் பார்த்தபோது  அப்பகுதியில் இருந்து தலைமறைவாகிள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் புளியங்குடி காவல்துறையினர் ராமராஜாவை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *