ஒட்டு மொத்த தமிழகமே வேலை, வருமானம் இன்றி தள்ளாடுகின்றது; ஈபிஎஸ் குற்றச்சாட்டு

காங்கேயத்தில் அதிமுக கொடி ஏற்றி வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு, திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமண நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார்.

பின் காங்கேயம் அண்ணா பேருந்து நிலையம் முன் 52 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். பின் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள்  ஏராளமான துன்பங்களை அனுபவத்து வருவதாகவும், குறிப்பாக விவசாயிகளும், நெசவாளர்களும் திமுக ஆட்சியில் வேலை இல்லை, கொப்பரைக்கு போதிய விலை இல்லை போன்ற காரணங்களால் நஷ்டமடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு தடை இல்லாமல் மும்முணை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு, ஆனால் திமுக அரசு வந்த 2.5 ஆண்டுகளில் 2 லட்சம் பம்பு செட்டுகள் வழங்கியதாக தெரிவித்தனர். ஆனால் திமுக  ஆட்சியில் மின்வெட்டு தற்போது தலை தூக்கியுள்ளது. திமுக ஆட்சியில் குறிப்பாக கைத்தறி நெசவாளர்கள் நெய்யும் துணி ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காததால், கைத்தறி இயந்திரங்களை எடைக்கு போடும் நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒட்டு மொத்த தமிழகமே வேலை, வருமானம் இன்றி தள்ளாடுகின்றது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை தேடி தர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *