வாளால் யாரை வெட்றதுனுதான் தெரியல – சீமான் உளறலால் பரபரப்பு…
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் யாதும் ஊரே என்ற தலைப்பில் இன்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசி முடித்த பிறகு, அவருக்கு முதலாம் சடையவர்மp சோழ சுந்தர பாண்டியன் சிலை கட்சி சார்பில் வழங்கப்பட்டது. மேலும், ரிஷிவந்தியம் வரலாறு என்ற புத்தகமும், வீரவாளும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. வீரவாளை பெற்றுக்கொண்ட சீமான், இப்படி நிறைய எனக்கு வாளெல்லாம் கொடுப்பாங்க, வேலை இல்லாமல் பூஜை அறையில்தான் இருக்கு, யாரை வெட்டுறதுன்னுதான் தெரியல என்றார்.
அப்போது, மேடையில் சிரிப்பலை ஏற்பட்டாலும், வன்முறையை தூண்டும் வகையில் அவர், அப்படி பேசியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இருந்தும், சீமான் தொடர்ந்து பேசுகையில், இதில் என்ன வேடிக்கைனா இந்த வாலையும், வேலையும் வைத்து நாம் போர் செஞ்ச வரைக்கும் நாம் சரியாக இருந்தோம். பூஜை அறையில் வந்து பூஜை செஞ்ச பிறகு எல்லாம் போச்சு. இதை மறுபடியும் வைத்து போர் செய்ய வேண்டும் என்றார்.