10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை; உண்மையை ஒப்புக்கொண்ட அண்ணாமலை

சத்தியமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை ஊர்வலம் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை பயணத்தை இன்று மாலை மேற்கொண்டார். சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தில் துவங்கிய பாதயாத்திரை நடைபயணம், கடைவீதி வழியாக பவானி ஆற்றுப்பாலம் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

ஊர்வலத்தின் இறுதியில் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில் லஞ்சம் ஊழல் பெருக்கெடுத்து வட்டாட்சியர் முதல் முதல்வர் வரை எங்கு பார்த்தாலும் ஒரே லஞ்சமாக உள்ளது. 10 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்களுக்கு உங்களுடைய ஆதரவனை தாருங்கள். தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி அவர்கள் வழங்கியுள்ளார்கள். ஒரு வருடம் தனி நபர் வருமானம் 90 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 37 ஆயிரத்து 835 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 3 லட்சத்து 14 ஆயிரத்து 575 குடிநீர் குழாய்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 883 கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 156 பேருக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்திற்காக நம்முடைய பிரதமர் அவர்கள் வழங்கி உள்ளார்கள். ஆகையால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு உங்களுடைய ஆதரவனை தாருங்கள் என கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *