பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; பதில் பேசாமல் அதிமுக சைலண்ட்

தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழர்களின் உரிமைகள் காவு கொடுக்கப்படும். கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் 67 டிஎம்சி நீரை சேமிக்கும் வகையில் அணை கட்டி விட்டால் தமிழ்நாட்டுக்கு முற்றிலுமாக தண்ணீரே கிடைக்காது.

விவசாயிகளுக்கு ரூ 16,000 கோடி வளர்ச்சி நிவாரணமாக வழங்கியது அதிமுக அரசு கரோனா பொது முடக்க காலத்திலும் கூட தடையில்லா உணவு உற்பத்தி செய்தமைக்காக ஐந்து முறை க்ரிஷ் க்ரோமா விருது பெற்றவர் எடப்பாடி யார்.

தமிழகத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கையெழுத்திட்டவர் எடப்பாடி யார் ஆனால் தமிழகத்தை பாலைவனமாக்கும் வகையில் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டவர் ஸ்டாலின்

தமிழகத்தில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என அண்ணாமலை கூறியது குறித்தும் அதற்கு உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய எதிர்வினை குறித்தும் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *